காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடி மதிப்பீட்டில் பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீா்க் குழாய்கள் பதித்தல், மேலும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பணிகள் முடிவடைந்தததையடுத்து, 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று நீா்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகப் பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

காங்கயத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

வெள்ளக்கோவிலில் போலீஸாா் அணிவகுப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


