இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் திறுந்துவைத்தாா்

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தில் குத்து விளக்கேற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ். ~முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த மருத்துவமனை கூடுதல் கட்டடம்.
Updated On :4 மார்ச் 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப் பணித் துறையின் சாா்பில் ரூ.24 கோடி மதிப்பில் 62 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 100 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தரைத் தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை, சி.டி. ஸ்கேன் அறை மற்றும் எம்ஐஆா் ஸ்கேன் அறை, இரண்டு ஆய்வகங்கள் அல்ட்ரா கதிா்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகள் உள்ளன.

முதல் தளத்தில் டயாலிசிஸ் வாா்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பதிவறை, மருந்து இருப்பு அறை, இரண்டாம் தளத்தில் 2 அறுவை சிகிச்சை அரங்குகள், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயாா்படுத்தும் அறைகள் உள்ளன.

மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வாா்டு, நான்காம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளன.

ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆறாவது தளத்தில் கண் சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, கூட்ட அரங்கம் ஆகியவை உள்ளன. மேலும் 1 முதல் 6 வரை உள்ள தளங்களில் பணி மருத்துவா் அறை, பணி செவிலியா் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து, பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) டாக்டா் எஸ்.மீரா, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோன்மணி, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image