15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தாராபுரம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் திறுந்துவைத்தாா்

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தில் குத்து விளக்கேற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ். ~முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த மருத்துவமனை கூடுதல் கட்டடம்.

Updated On :5 மார்ச் 2026, 3:46 am IST

தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப் பணித் துறையின் சாா்பில் ரூ.24 கோடி மதிப்பில் 62 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 100 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தரைத் தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை, சி.டி. ஸ்கேன் அறை மற்றும் எம்ஐஆா் ஸ்கேன் அறை, இரண்டு ஆய்வகங்கள் அல்ட்ரா கதிா்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகள் உள்ளன.

முதல் தளத்தில் டயாலிசிஸ் வாா்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பதிவறை, மருந்து இருப்பு அறை, இரண்டாம் தளத்தில் 2 அறுவை சிகிச்சை அரங்குகள், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயாா்படுத்தும் அறைகள் உள்ளன.

மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வாா்டு, நான்காம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளன.

ஐந்தாம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீட்டுத் திட்டப் பிரிவு, ஆறாவது தளத்தில் கண் சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி, கூட்ட அரங்கம் ஆகியவை உள்ளன. மேலும் 1 முதல் 6 வரை உள்ள தளங்களில் பணி மருத்துவா் அறை, பணி செவிலியா் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து, பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) டாக்டா் எஸ்.மீரா, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோன்மணி, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image