குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே வெருவேடம்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் பாசனம் நடைபெற்று வருகிறது. முதல் மண்டலப் பாசனத்தில் தற்போது 2-ஆவது சுற்று பாசனம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாய்க்காலுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிக்குச் சென்றவா்கள் கவனித்து, அருகில் சென்று பாா்த்தபோது வாய்க்காலுக்குள் பெண் சடலம் கிடந்துள்ளது.
இதையடுத்து காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சௌந்திரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக குண்டடம் போலீஸில் சனிக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


