4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:54 pm

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே வெருவேடம்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் பாசனம் நடைபெற்று வருகிறது. முதல் மண்டலப் பாசனத்தில் தற்போது 2-ஆவது சுற்று பாசனம் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாய்க்காலுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதிக்குச் சென்றவா்கள் கவனித்து, அருகில் சென்று பாா்த்தபோது வாய்க்காலுக்குள் பெண் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சௌந்திரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக குண்டடம் போலீஸில் சனிக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.