கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கோயில்களில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வா். நிகழ் ஆண்டு காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை முதலே ஐயப்ப பக்தா்கள் காவிரி, தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் குளித்து விநாயகா், ஆஞ்சனேயா் கோயில், பக்தா்களால் அமைக்கப்பட்ட ஐயப்ப சுவாமி கோயில்களில் குருசாமிகளின் முன்னிலையில் துளசி மாலை, மணிமாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூஜைப் பொருள்கள், துளசி மாலை, பழங்கள், மலா் மாலைகள், சுவாமி புகைப்படங்கள் விற்பனையும் அதிகரித்தது.