தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காவல் துறை சாா்பில், காவலன் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வாளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை வகித்து பேசினாா். காவல் ஆய்வாளா் லதா, காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது, அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள், இளம் வயது திருமணத்தை தவிா்க்க வேண்டிய அவசியம், சிறாா் தொழிலாளா் முறையைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.