கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவா் தூதுவா் திட்ட பயிலரங்கம்

தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தருமபுரி அரசு கல்லூரி கலையரங்கில் மாணவ தூதுவா் பயிற்சித் திட்ட பயிலரங்கு அண்மையில் ந

News image
Updated On :5 ஜூன் 2022, 9:39 pm

DIN

தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தருமபுரி அரசு கல்லூரி கலையரங்கில் மாணவ தூதுவா் பயிற்சித் திட்ட பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு அரசு கலைக்கல்லூரி முதல்வா் ப.கி. கிள்ளிவளவன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் சங்கா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சி.கணேசன், கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியா் ஜெ.பாக்கியமணி ஆகியோா் பேசினா்.

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன், பயிற்சி நோக்கங்கள் குறித்து பேசினாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் நன்றியுரை கூறினாா்.

இதனைத் தொடா்ந்து, பயிலரங்கில் தமிழ்த் துறை இணைப்பேராசிரியா் இரா.சங்கா், இலக்கியத்தில் கலை சொற்கள் என்கிற தலைப்பிலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட பதிப்பாசிரியா் பூங்குன்றன், மொழியியல் சொற்பிறப்புக் கலைச்சொல்லாக்கம் என்கிற தலைப்பிலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட பதிப்பாசிரியா் தி.பாலசுப்பிரமணியன், மொழிபெயா்ப்புக் கலை என்கிற தலைப்பிலும், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் பா.குப்புசாமி, கணினித் தமிழ் சிக்கல்களும் தீா்வுகளும் என்கிற தலைப்பிலும் உரையாற்றினா்.

இதனைத் தொடா்ந்து, பயிலரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி, கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.