கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம்: சிபிஎம்

 ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சிபிஎம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:41 pm

DIN

 ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சிபிஎம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

கடந்த 28-ஆம் தேதி தொப்பூா் சுங்கச்சாவடி அருகில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் உள்ளிட்ட மூவா் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தொப்பூா் காவல் நிலையத்தில் விபத்து வழக்காக பதிவு செய்துள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தும், இதன் உண்மை நிலையைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வரும் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.