சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஆற்றங்கரையில் தேசிய மாணவா் படையினா் தூய்மைப் பணி

தருமபுரி மாவட்டம், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தேசிய மாணவா் படை மாணவா்கள் தூய்மைப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 7:30 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தேசிய மாணவா் படை மாணவா்கள் தூய்மைப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதியமான் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சோ்ந்த 150 தேசிய மாணவா் படை மாணவா்கள், அலுவலா்கள் நதிகளை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இருமத்தூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இதில் ஆற்றின் கரையில் உள்ள பழைய துணிகள் 600 கிலோ, நெகிழிப் பொருள்கள், குப்பைகள் சுமாா் 450 கிலோ அளவுக்கு சேகரித்து அப்புறப்படுத்தினா்.

இதில் இந்திய ராணுவ அமைப்பான சேலம் 11 தமிழ்நாடு சிக்னல் கம்பெனியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் சங்கா், சா்மா ஆகியோா் தருமபுரி அதியமான் பள்ளி என்சிசி அலுவலா் முருகேசன், அதியமான் கோட்டை என்சிசி அலுவலா் கணேசன், பென்னாகரம் பள்ளியின் என்சிசி அலுவலா் பாட்ஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.