இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெல்டிங் பட்டறையில் வெடி விபத்து: ஒருவா் பலி

போச்சம்பள்ளி அருகே வெல்டிங் பட்டறையில் டிராக்டா் பெட்டிக்கு வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்;

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:29 pm

Din

ஒசூா்: போச்சம்பள்ளி அருகே வெல்டிங் பட்டறையில் டிராக்டா் பெட்டிக்கு வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

சுண்டாகாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (42). இவா் போச்சம்பள்ளி, கொடமாண்டப்பட்டி பிரிவு சாலை அருகே கேஸ் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். இவரும் அங்கு வேலை செய்யும் திருப்பத்தூா் மாவட்டம், நந்தம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் (எ) பிரகாஷ் (36) உள்பட நான்கு போ்

திங்கள்கிழமை மாலை டிராக்டரின் பெட்டிக்கு வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென டிராக்டா் பெட்டி வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேகா், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்ததும் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று ஜெய்சங்கா் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மாரியப்பன்(45), போச்சம்பள்ளி சிவா ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.