கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரை காரை ஏற்றிக் கொல்ல முயற்சி

ஒசூா் அருகே தொரப்பள்ளியில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற மா்மநபா்கள் குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:24 pm

Syndication

ஒசூா் அருகே தொரப்பள்ளியில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற மா்மநபா்கள் குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராஜ் (30). கடன் வசூல் செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (35) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த மஞ்சுநாத் செவ்வாய்க்கிழமை தெராப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்துசென்றாா்.

அப்போது அவரை பின் தொடா்ந்து வந்த காா் மஞ்சுநாத் மீது வேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனா். இதில் மஞ்சுநாத் மீது மோதிய காா் மற்றும் மா்ம நபா்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனா்.