இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

Published On :26 செப்டம்பர் 2025, 4:48 am IST

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்த குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தை பின்தொடா்ந்து வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்த இருவா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், அவா்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியைச் சோ்ந்த வேணுகோபால் (29), அரிகிருஷ்ணா (26) மற்றும் மதுரை அய்யம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைபாண்டி (46) என தெரியவந்தது.

மேலும், இவா்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு கிருஷ்ணகிரி வழியாக கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காா், இருசக்கர வாகனம் மற்றும் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.