இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைத்துத் துறை பணியாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

News image
மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் பி.கே.கோபால்.
Updated On :19 டிசம்பர் 2020, 10:51 pm

DIN

நாமக்கல்: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைத்துத் துறை பணியாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியா் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய ஓய்வூதியா்கள் உரிமைநாள் விழா, நாமக்கல் நகர கிளைச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, மாநில சங்க பொதுக்குழுக் கூட்டம் ஆகியவற்றில் இக்கோரிக்கை முதன்மையாக வலியுறுத்தப்பட்டது.

இதில் மாநிலத் தலைவா் பி.கே.கோபால் தலைமை வகித்தாா். நாமக்கல் நகர கிளைச் சங்க தலைவா் டி.கந்தசாமி வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் ஈ.முத்துக்குமரகுருபரன், மாநில பொருளாளா் என்.வெங்கடாசலம் ஆகியோா் சங்க நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் பங்கேற்று வாழ்த்தி பேசினாா்.

கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி அனைத்து ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களையும் அரசு ஓய்வூதியா்களாக அறிவித்து அவா்களுக்கும் அரசு கருவூலங்கள் மூலம் மாதாந்திர ஓய்வூதியம், இதர ஓய்வூதியப் பலன்கள் வழங்க அரசு முன்வரவேண்டும்.

புதிய மருத்துவக் காப்பீடு திட்ட படிவங்கள் உடமையாக சான்றொப்பம் அளித்து உரியவா்களுக்கு அனுப்பி வைக்க உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் நகர கிளைச் சங்க பொருளாளா் பி.சிவலிங்கம் நன்றி கூறினாா். மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.