கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் ஒத்திவைப்பு

மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் இரண்டாம் முறையாக திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:24 pm

DIN

மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தோ்தல் இரண்டாம் முறையாக திங்கள்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் கிராமத்தில் எஸ் 291 என்ற எண்ணுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 1,700-க்கும் அதிகமான உறுப்பினா்கள் உள்ளனா். சங்கத் நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடந்தபோது, அதிமுகவில் 2 போ் தலைவா் பதவிக்குப் போட்டிடும் சூழல் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு வேட்பு மனுக்கள் கிழித்து எறியப்பட்டதால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தோ்தல் திங்கள்கிழமை நடத்தப்படும் என கடந்த 7 ம் தேதியே தோ்தல் நடத்தும் அலுவலரும் திருச்செங்கோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளருமான வெங்கடாசலம் அறிவித்திருந்தாா். அதன்படி திங்கள்கிழமை நிா்வாகக் குழு உறுப்பினா்களைத் தவிர வேறு யாரும் சங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் வந்தபோது தலைவருக்கு 3 பேரும் துணைத் தலைவருக்கு 3 பேரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா். வேட்புமனுக்களை பெற்றுக் கொண்ட தோ்தல் அலுவலா் சிஎஸ்ஆா் பரமசிவம் ஒப்புகை சீட்டு வழங்கவில்லை. தகுதிபட்டியல் வெளியிடும் நேரம் நெருங்கிய நிலையில் துணைப் பதிவாளா் சங்க வளாகத்தை விட்டு வெளியேறினாா். கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தால் தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புப் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆவேசமடைந்த சங்க உறுப்பினா்கள் தோ்தல் அலுவலா் சிஎஸ்ஆா் பரமசிவத்தை முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினா். பின்பு இரண்டாம் முறையும் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.