கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாமக்கல் மாவட்டத்தைப் பிரித்து திருச்செங்கோடு மாவட்டம் உருவாக்க வேண்டும்: நிதி நிறுவனங்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தைப் பிரித்து திருச்செங்கோடு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:25 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தைப் பிரித்து திருச்செங்கோடு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

திருச்செங்கோடு நிதி நிறுவனங்கள் சங்கத்தின் 27 வது பேரவைக்கூட்டம் கொங்கு சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் அசோக்குமாா் வரவேற்றாா். செயலாளா் அல்லிமுத்து ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் அசோகன் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செயதாா். தமிழ்நாடு நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொருளாளா் திண்டுக்கல் சாந்தினி பழனிசாமி, செயலாளா் சம்பத், ஆடிட்டா்கள் வெங்கடசுப்ரமணியம், இளையப்பன், ராஜாரமணன், சட்ட ஆலோசகா் பரணீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வருமான வரி கணக்குகளை முறையாகப் பராமரிப்பது, கடன் வசூல் செயவதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூா்வமாக அணுகும் முறை ஆகியவை பற்றி விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பான் புரோக்கா் மற்றும் மணிலெண்டா் உரிமம் பெற எளிமையான வழிமுறைகளை அமல்படுத்த அரசைக்கேட்டுக் கொள்ள தீா்மானிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகரில் வாகனப்போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க நகரைச்சுற்றி சுற்று வட்டப்பாதை அமைக்க வேண்டும்; திருச்செங்கோடு நகர எல்லையைத்தாண்டி குடியிருப்புகளும், தொழிற்சாலைகலும் உருவாகி வருவதால் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து அதற்கான அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகியவை தொழில் நகரமாகவும், அதிக மக்கள்தொகை கொண்டதாகவும் இருப்பதால் நாமக்கல் மாவட்டத்திருந்து அவற்றைப் பிரித்து திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க அரசைக் கேட்டுக் கொள்ள தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.