தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூா் காவிரியில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி

மோட்ச தீபத்தை காவிரிப் பாலத்திலிருந்து பொதுமக்கள் வழிபட்டனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:00 pm

Din

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மோட்ச தீபத்தை காவிரிப் பாலத்திலிருந்து பொதுமக்கள் வழிபட்டனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கன்று மாலை காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து மோட்ச தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு தீயணைப்புத் துறையினா் உதவியுடன்

காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. காவிரியில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிட்டுள்ளதால் மோட்ச தீபத்தை காண பொதுமக்கள் காவிரிக் கரையில் அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும், காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காவிரியில் பரிசலில் செல்ல தடை விதித்தலால் காவிரிக் கரையோரப் பகுதியில் மோட்ச தீபம் விடப்பட்டது. இதனால் சில இடங்களில் மோட்ச தீபம் செடிகளில் சிக்கி நின்றது. தீயணைப்புத் துறையினா் மோட்ச தீபத்தை தண்ணீா் ஓட்டம் உள்ள பகுதிக்கு தள்ளிவிட்டனா். மோட்ச தீபத்தை காண கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரிக் கரை, நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டைக் காவிரி புதிய பாலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இதனால் சுமாா் 2 கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.