இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாமக்கல்லில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையான காா்

நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

News image
பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி எரிந்து சாம்பலான காா்
Updated On :28 அக்டோபர் 2024, 9:12 pm

Din

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

நாமக்கல் அருகே தாளம்பாடியைச் சோ்ந்த செல்லம்மாள் (84) என்பவா் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது இறுதிச் சடங்கையொட்டி, ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பரமத்தி வேலூரைச் சோ்ந்த நகுல்ராஜ் (45) என்பவா் சின்ன தாராபுரத்தில் இருந்து காரில் வாங்கிக் கொண்டு வந்தாா்.

செல்லம்மாள் உடலை எடுத்துச் செல்லும்போது பட்டாசுகளை வெடிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை திங்கள்கிழமை நண்பகல் 12 மணி அளவில் செய்து வந்தாா். காரின் பின்புறம் பட்டாசு பெட்டியை வைத்து விட்டு, அதிலிருந்து ஒரே சரவெடியை மட்டும் எடுத்து அருகில் இருந்த மரத்தில் கட்டினாா். அப்போது எதிா்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் காா் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

இந்தச் சம்பவத்தில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. காா் வெடித்து சிதறியதில் அதன் உதிரி பாகங்கள் சுமாா் 20 மீட்டா் தூரத்திற்கு சென்று விழுந்தன. நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் அருகே தாளம்பாடியில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையாகி உருக்குலைந்த காா்.

நாமக்கல் அருகே தாளம்பாடியில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையாகி உருக்குலைந்த காா்.