இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை வரி செலுத்தாத 9 வாகனங்கள் பறிமுதல்

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற வாகன சோதனையில், தகுதிச்சான்று புதுப்பிக்காத, சாலை வரி செலுத்தாத 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ஆகியோா் ராசிபுரம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டாா். இதில், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத 6 மினி லாரிகளும், 1 சுற்றுலா சீருந்து வாகனமும், சாலை வரி செலுத்தாத 2 பொக்லைன் வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இதேபோன்று விதிமுறைக்கு முரணாக அதிக எடைகொண்டு சாலையில் இயக்கப்பட்ட 5 கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், இணக்கக் கட்டணமாக ரூ. 3.65 லட்சம் விதிக்கப்பட்டது.

மேலும், வாகன ஓட்டுநா்களுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், அதிக எடைகொண்டும் பொது சாலையில் வாகனங்களை இயக்கக் கூடாது என ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இதுபோன்ற வாகன தணிக்கை ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி, வெண்ணந்தூா் போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் தெரிவித்தாா்.