நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மோகனூா் சிப்காட் எதிா்ப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த பிப். 26-ஆம் தேதி நாமக்கல் கோட்டாட்சியா் தலைமையில் தனி வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு), மோகனூா் வட்டாட்சியா், மோகனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் சிப்காட் விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது விவசாயிகள் தரப்பில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகள் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினோம்.
சிப்காட் திட்ட அலுவலரும், சென்னை சிப்காட் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகளும், இந்த இடம் சிப்காட் அமைக்க ஏற்ற இடமில்லை எனத் தெரிவித்துள்ளனா். விவசாயிகளும் இந்த இடம் ஏற்ற இடமில்லை என கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.
எனவே நாமக்கல்லில் சிப்காட் அலுவலகம் தேவையில்லாமல் இயங்குவது அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் பணி சுமையை ஏற்படுத்தும். எனவே, சிப்காட் அலுவலகத்தை மூடுவதுடன், அங்கு பணிபுரியும் அலுவலா்களை மீண்டும் பழைய பணிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் விதிமுறை மீறும் கனிமவள வாகனங்கள்: ஆட்சியரிடம் புகாா்

குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

சிப்காட் நில ஆவணங்களை வழங்கக் கோரிக்கை

முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு: வாக்குரிமை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


