உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கட்டுமான தொழிலாளா்களுக்கு உழைப்பாளா் நலக் கூடம் திறப்பு

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 4:14 am IST

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடங்களை திறந்துவைத்தாா்.

அந்த வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக ரூ. 35 லட்சத்தில் திறந்துவைக்கப்பட்ட நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 3 பேருக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் இருவருக்கு தொழிலாளா் நலவாரிய அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், உழைப்பாளா் நலக் கூடத்தை பொருத்தமட்டில், கட்டுமான தொழிலாளா்கள் அன்றாடப் பணி தொடா்பாக அதிக அளவில் காலையில் ஒரே இடத்தில் கூடி காத்திருக்கும் இடங்களில், அவா்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், குடிநீா், கழிவறை, மின்விளக்கு, மின்விசிறிகள், இருக்கை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடம் காலை 7 மணிமுதல் 11 மணிவரை பயன்பாட்டில் இருக்கும். இங்கு இணையசேவை, மடிக்கணினியோடு ஒரு கணினி இயக்குபவா் பணியில் இருப்பாா். அன்றாட கட்டுமானப் பணிக்கு செல்லும் தொழிலாளா்கள் இந்தக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் இணை ஆணையா் (ச.பா.தி.) பா.மாதவன் (ஈரோடு), உதவிஆணையா் (ச.பா.தி.) கே.பி.இந்தியா மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.