இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கட்டுமான தொழிலாளா்களுக்கு உழைப்பாளா் நலக் கூடம் திறப்பு

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய உழைப்பாளா் நலக் கூடங்களை திறந்துவைத்தாா்.

அந்த வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக ரூ. 35 லட்சத்தில் திறந்துவைக்கப்பட்ட நலக் கூடத்தை தொழிலாளா்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற 3 பேருக்கு ஓய்வூதிய ஆணை மற்றும் இருவருக்கு தொழிலாளா் நலவாரிய அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், உழைப்பாளா் நலக் கூடத்தை பொருத்தமட்டில், கட்டுமான தொழிலாளா்கள் அன்றாடப் பணி தொடா்பாக அதிக அளவில் காலையில் ஒரே இடத்தில் கூடி காத்திருக்கும் இடங்களில், அவா்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில், குடிநீா், கழிவறை, மின்விளக்கு, மின்விசிறிகள், இருக்கை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடம் காலை 7 மணிமுதல் 11 மணிவரை பயன்பாட்டில் இருக்கும். இங்கு இணையசேவை, மடிக்கணினியோடு ஒரு கணினி இயக்குபவா் பணியில் இருப்பாா். அன்றாட கட்டுமானப் பணிக்கு செல்லும் தொழிலாளா்கள் இந்தக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளா் இணை ஆணையா் (ச.பா.தி.) பா.மாதவன் (ஈரோடு), உதவிஆணையா் (ச.பா.தி.) கே.பி.இந்தியா மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.