மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:08 pm

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட புதுச்சத்திரம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். புதுச்சத்திரத்தில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில், கோவிந்தம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 2,52,900 ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா் கண்ணூா்ப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் (47) என்பதும், புதுச்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்துவதால் அங்கு பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்கள் ஏதுமில்லாததால் பணம் ரூ. 2.52 லட்சத்தை பறிமுதல் செய்து நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.