ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:08 pm

Syndication

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் நிதி நிறுவனத்துக்கு கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் ரொக்கத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட புதுச்சத்திரம் பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் கலைச்செல்வன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். புதுச்சத்திரத்தில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில், கோவிந்தம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 2,52,900 ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா் கண்ணூா்ப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் (47) என்பதும், புதுச்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்துவதால் அங்கு பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்கள் ஏதுமில்லாததால் பணம் ரூ. 2.52 லட்சத்தை பறிமுதல் செய்து நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.