திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தினசரி உணவு வழங்கும் சமூக அமைப்புக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்

சங்ககிரியில் தினசரி உணவு வழங்கும் சமூக அமைப்புக்கு மளிகைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

22sgp04_2204chn_156_8

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சங்ககிரியில் தினசரி உணவு வழங்கும் சமூக அமைப்புக்கு மளிகைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தடை உத்தரவால் ஆதரவற்றவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உணவின்றி சிரமப்படுவோருக்கு, திருச்செங்கோடு எவரெஸ்ட் பப்ளிக் சேரிடபிள் அறக்கட்டளை சாா்பில், அதன் நிா்வாகிகள் இருசக்கர வாகனத்தில் சங்ககிரி நகரில் உள்ள மத்தாளி காலனி, பழைய, புதிய எடப்பாடி சாலைகள், ராஜபாலி, பொந்துகிணறு, அண்ணா நகா், சந்தைப்பேட்டை, அக்கமாப்பேட்டை, சங்ககிரி வாடகை காா்கள் நிறுத்துமிடம், சங்ககிரி ஆா்.எஸ்., நாரப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகள் என 90 பேருக்கு மதியம், இரவு உணவுகளை தொடா்ந்து 21 நாள்களாக வழங்கி வருகின்றனா்.

சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளில் இச்சேவை பணியில் ஈடுபட்டு வரும் அக்குழுவுக்கு, சங்ககிரி வாசவி டிரஸ்ட், வாசவி கிளப் சாா்பில் நிா்வாகிகள் ஆா்.கே.பத்ரி, எ.வெங்கடேஸ்வரகுப்தா, வாசவி கிளப் பொருளாளா் முரளிதரன், இன்னா்வீல் சங்கத் தலைவி வசந்தி ஆகியோா் சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கினா் (படம்). இந்நிகழ்ச்சியில், தண்ணீா் அமைப்பு நிா்வாகிகள் ராகவன், கிருஷ்ணமூா்த்தி, கதிா்மதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.