நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்படுகிறார்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்பட்டு வருகிறார் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ள
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்படுகிறார்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
Published on
Updated on
1 min read

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்காக செயல்பட்டு வருகிறார் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் மாநில பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை அசைக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தையே நடத்த முடியாத அளவுக்கு கடும் போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் 6 சதவீத வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை இனிமேல் நம்பப் போவதில்லை, தீவுத்திடல் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என முடிவெடுக்க உள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை என்று காரணம் கூறுவது ஏற்க முடியாது. ஸ்டாலின் திராவிட மாடல் பற்றி பேசுகிறார். நிதி அமைச்சரோ கார்ப்பரேட் மாடலுக்காக செயல்படுகிறார். எங்களது போராட்டம் கார்ப்பரேட் மாடலுக்கு எதிரானதாக அமையும். தொடர்ந்து பேசும்போது, சமூக நீதிப் பேசும் திமுக அரசு சமூக நீதியை சீர்குலைக்க கூடிய அரசாணைகள் 115, 139 மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது.  

இந்த அரசாணைகள் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை இனி வரும் காலங்களில் தேர்வாணையம் மூலம், வேலைவாய்ப்பகம் மூலமா பணி நியமனம் செய்வதற்கு பதிலாக, அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனங்களை கொண்டு ஆட்கள் நியமனம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்க முடியாமல் 69 சதவீத சமூக நீதி இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்படும். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என திமுக அரசு இரட்டை தன்மை கொண்ட அரசாக உள்ளது. தமிழக அரசின் கஜானாவில் உள்ள வைப்புநிதி தொகை 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை சுரண்டுவதற்கு பழனிவேல் தியாகராஜன் கார்ப்பரேட் மாடலுக்ககு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com