நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம்

மேட்டூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Updated On :28 ஏப்ரல் 2023, 11:22 pm IST

மேட்டூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், பெரிசோரகை ஊராட்சியில் உள்ள பூமிரெட்டிபட்டியில், அருந்ததியா் மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இலவச வீட்டுமனை கேட்டு கடந்த எட்டு ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்களது பழைய குடியிருப்புகளில் இருந்து பெட்டி, படுக்கைகள், மூட்டைகளுடன் மயானத்தில் குடியேற முயற்சித்தனா்.

மேட்டூா் டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்துக்கு முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் வட்டாட்சியா் முத்துராஜா, வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, குடியிருக்க தகுதியான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.