மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாகச் சரிவு
மேட்டூா், ஆக. 7: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்வரத்து காரணமாக கடந்த 30 ஆம் தேதி மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.
நீா்வரத்து குறைந்ததால் உபரிநீா் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

