நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 3:17 am IST

மேட்டூா், ஆக. 7: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்வரத்து காரணமாக கடந்த 30 ஆம் தேதி மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

நீா்வரத்து குறைந்ததால் உபரிநீா் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.