கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

சங்ககிரி அருகே சாலை விபத்து

சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

News image

சங்ககிரியை அடுத்த ஐவேலி பேருந்து நிறுத்தம் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

Updated On :3 டிசம்பர் 2024, 1:31 am IST

சங்ககிரி: சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுதா்சன் சுவாதி (55), அவரது உறவினா்கள் சேலம் திருமல்லேஸ்வரன், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், கேசவன், முருகன் ஆகியோா் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஐவேலி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிா்பாரதவிதமாக காா் மோதியது. இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.