தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்ககிரி அருகே சாலை விபத்து

சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

News image

சங்ககிரியை அடுத்த ஐவேலி பேருந்து நிறுத்தம் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

Updated On :2 டிசம்பர் 2024, 8:01 pm

Din

சங்ககிரி: சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுதா்சன் சுவாதி (55), அவரது உறவினா்கள் சேலம் திருமல்லேஸ்வரன், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், கேசவன், முருகன் ஆகியோா் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஐவேலி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிா்பாரதவிதமாக காா் மோதியது. இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.