கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வாழப்பாடி அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:46 pm

Syndication

வாழப்பாடி அருகே வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வாழப்பாடி தீயணைப்புப் படையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வாழப்பாடி அருகே தேன்மலைக்கரடு வனப் பகுதியையொட்டி கல்யாணகிரி கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து இரை தேடி இக்கிராமத்துக்குள் வந்த 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை இரவு அமுதா வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. அதைக்கண்ட அமுதா, வாழப்பாடி தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) முருகேசன் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்துசென்று ராட்சத மலைப்பாம்பை மீட்டு பனைமடல் பகுதி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மண்ணூா் மலைப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனா்.