அதிமுக மாணவா் அணி சாா்பில் மடிக்கணினி வழங்கும் விழா

Published on

அதிமுக மாணவா் அணி சாா்பில் தனியாா் அறக்கட்டளை மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் அதிமுக மாணவரணி செயலாளா் பிரேம்குமாா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக மாநகா் மாவட்ட பொறுப்பாளா் சிங்காரம், மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு தலைமை வகித்தனா்.

அறக்கட்டளை மூலம் கல்வி பயிலும் 65 ஏழை மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மடிக்கணினி, உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்ரமணியன், பகுதிச்செயலாளா்கள் பழனி, சிவகுமாா், சாா்பு அணி நிா்வாகிகள் வெங்கடேஷ், நிதின், கிஷோா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com