தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

திண்டுக்கல் அருகே பூசாரி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை: 5 பேர் சிக்கினர்

திண்டுக்கல் அருகே பூசாரி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 100 பவுன் நகை, ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:19 pm IST

திண்டுக்கல் அருகே பூசாரி வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 5 கொள்ளையர்களை பொன்னமராவதி அருகே காவல்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்து சுமார் 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இரு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சுக்காம்பட்டி சிவன்கோயில் பூசாரி துரைஆதித்தன். இவரது வீட்டில் இருந்தவர்களை மர்மநபர்கள் ஆயுதங்களால்  தாக்கி 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த திண்டுக்கல் காவல்துறையினர் காரில் தப்பி சென்ற கொள்ளையர்களை விரட்டி வந்துள்ளனர். மதுரைமாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அக்கொள்ளையர்கள் தப்பி வருவதாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் கொள்ளையர்களை பின் தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். தொடர்ந்து சிவகங்கை பகுதியில் கொள்ளையர்கள் சென்ற போது சிவகங்கை காவல்துறையினர் விரட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்கைப்பகுதியில் வந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்ஷக்திகுமார் தலைமையில் மாவட்டத்திற்குள்ப்பட்ட அதிகாரிகள் பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி தச்சம்பட்டி-குமாரபட்டி காட்டுப்பகுதியில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தச்சம்பட்டி காட்டுப்பகுதியில் ஒரு கார் நின்றது. அதனைக்கண்டு கொள்ளையர்கள் இப்பகுதியில் தான் இருப்பார்கள் என தேடுதலை தீவிரப்படுத்தினர். அப்போது காவலர் பிரபாகரன் கையில் கத்தியுடன் ஒடிய கொள்ளையனை மடக்கி பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், நெற்குப்பை காவலர் முருகன், எஸ்வி மங்கலம் காவலர் சதாம் உசேன் மற்றும் திருக்களம்பூரை சார்ந்த இளைஞர்கள் சிவகங்கை, பரமக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த அஜீத், செல்லப்பாண்டி, கல்யாணசுந்தர், சந்தோஷ், கலைஞானம் ஆகிய கொள்ளையர்களை  விரட்டிப்பிடித்துள்ளனர்.

இதனையடுத்து கொள்ளையர்கள் பயன்படுத்திய பதிவுஎண் இல்லாத காரினை பறிமுதல் செய்து அதிலிருந்த 150 பவுன் நகை, 35 லட்சம் ரொக்கம் மற்றும் அரிவாள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 5 கொள்ளையர்கள் மற்றும் கைபற்றப்பட்ட பொருள்களை பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் அதிகாரிகள் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இச்சம்பவம் பொன்னமராவதி மேலும் இது குறித்து புதுக்கோட்டை எஸ்பி அருண்ஷக்திகுமார் கூறியதாவது, இக்கொள்ளையர்களை பிடித்த காவல்துறை நண்பர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பிடிபட்ட 5 கொள்ளையர்கள் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.