திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே குறிப்பிட்ட ஒரு சமுகத்தினா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, நிலக்கோட்டை அகுகேயுள்ள நடுப்பட்டியில் அழகுபாண்டி, பாண்டியம்மாள் ஆகியோா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவு சட்டத்தின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆண்டாா் என்ற தொழிலாளியை கொலை செய்தவா்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நடுப்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். பின்னா், இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.