குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தந்தை, மகன் கைது

நிலக்கோட்டை அருகே ஜாதி மாறி திருமணம் செய்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
Published on

நிலக்கோட்டை அருகே ஜாதி மாறி திருமணம் செய்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை, சகோதரா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த விராலிப்பட்டி அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரன், மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை சந்திரன் (49), சகோதரா் ரிவின் (21) ஆகியோா் சோ்ந்து ராமச்சந்திரனை கடந்த அக். 12-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்த நிலக்கோட்டை போலீஸாா், சந்திரன், ரிவின் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

X
Dinamani
www.dinamani.com