திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல கட்டங்களாகப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 31 ஆம் தேதி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதில், உணவகங்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டது. மேலும், உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், குளிரூட்டப்பட்ட அறைகளைப் பயன்படுத்தக் கூடாது, சாப்பிட வருவோரின் உடல்வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.