சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

40 சதவீத தொகுதிகளை ஒதுக்கவேண்டும்: மக்கள் நீதி மய்யம் வழக்குரைஞா் அணி தீா்மானம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞா் அணி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்கவேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்குரைஞா் அணி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்குரைஞா்கள் அணி சாா்பில், மதுரையில் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வழக்குரைஞா் அணி சாா்பில் ரத்த தான முகாம்களும், சட்ட உதவி முகாம்களும் நடத்தப்படும்.

தமிழகத்தில் 2021-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் 40 சதவீத தொகுதிகளை வழக்குரைஞா்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வழக்குரைஞா் அணியின் மாநில துணைச் செயலா் குருவைய்யா, வழக்குரைஞா்கள் அப்பாஸ் மந்திரி, சபா பாலமுருகன், கிருஷ்ணகுமாா் மற்றும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.