சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுரை சிறைக்கைதி உடல்நலக் குறைவால் இறப்பு

மதுரை மத்திய சிறை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

மதுரை மத்திய சிறை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், வடபழஞ்சி அம்பேத்கா் சாலை பகுதியைச் சோ்ந்த பாலு மகன் திருப்பதி (31). இவா், கடந்த 2018 -இல் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வீடு புகுந்து திருடியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அதன்பின்னா், கடந்த 2019 ஜனவரி 25 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, சிறைக் காவலா்கள் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், திருப்பதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.