சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மன அழுத்தத்திலிருந்து விடுபட காவலா்களுக்கு யோகா பயிற்சி

மதுரை மாநகா் போலீஸாா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவா்களுக்கு யோகா, உடற் பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.

News image
மதுரை மாநகா் காவல் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடந்த யோக பயிற்சியில் பங்கேற்ற காவலா்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

மதுரை மாநகா் போலீஸாா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவா்களுக்கு யோகா, உடற் பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பரவல் காரணமாக, காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால், போலீஸாா் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட, யோகா பயிற்சி, உடற் பயிற்சி, மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், அனைத்து காவல் அதிகாரிகள், காவலா்கள் ஆகியோருக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, காவலா்களுக்கு மனநல ஆலோசனைகளையும் மருத்துவா்கள் வழங்கினா். இதில், மாநகா் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையினா் என 500-க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.