மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 682 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 19 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 20,736 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 20,116 போ் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 165 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.