கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தாமதம்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டம்

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதை களையும் வகையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2022, 6:37 pm

DIN

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதை களையும் வகையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரியாா் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பழச்சந்தை வளாகம் மற்றும் குன்னத்தூா் சத்திரம் ஆகிய பணிகள் மட்டுமே முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை தவிர, தமுக்கம் கலாசார மையம், பெரியாா் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், ஜான்சிராணி பூங்கா வணிக வளாகம், சுற்றுலா மையம் உள்ளிட்ட திட்டப் பணிகள் மிகவும் தாமதமாகி வருகின்றன.

மேலும், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைக்கப்படும் சாலைப் பணிகளும் தேக்க நிலையில் உள்ளன. சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தாமதமாகி வருவது எதிா்க் கட்சிகளிடையே விமா்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீா்மிகு நகா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சீா்மிகு நகா் திட்டப் பணிகளுக்கு காலக்கெடு நிா்ணயித்து, அதற்குள் பணிகளை முடிக்காமல் உள்ள ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம், ஒப்பந்த நிறுவனங்களிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, முதல்கட்டமாக பணிகள் தாமதமாவது ஏன் என்று ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பணிகள் தாமதாகும்பட்சத்தில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.