கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல்: ஊராட்சித் தலைவியின் கணவா் மீது ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா்

ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சித் தலைவியின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

News image
Updated On :20 மே 2022, 6:40 pm

DIN

ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சித் தலைவியின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தென்மண்டல காவல் துறை தலைவா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா எஸ்.ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மேகசெல்வம். முன்னாள் ராணுவ வீரரான இவா், தென் மண்டல காவல்துறை தலைவா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்துள்ள புகாா்:

நான் வசித்து வரும் எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவா், ஊராட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிட்டு வருகிறாா். 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் மனைவிக்குப் பதிலாக அவரே கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறாா்.

மேலும், மே 1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவி இல்லாமலேயே நடைபெற்றது. துணைத் தலைவா் மட்டும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், கிராமத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஊராட்சித் தலைவியின் தரப்பினா் தங்களுக்கு வேண்டியவா்களான 20 பேரை மட்டும் வைத்து, கிராமசபைக் கூட்டத்தை நடத்தினா்.

இது குறித்து கேட்டதற்கு, ஊராட்சித் தலைவியின் கணவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு முறைகேடுகளை தட்டிக்கேட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தாா். மேலும், அவரது ஆதரவாளா்களும் என்னை தாக்க முயன்றனா். அப்போது, ஊா் மக்கள் தலையிட்டு என்னைக் காப்பாற்றினா்.

இது சம்பந்தமாக, சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். புகாரின்பேரில் ஏற்பு ரசீது வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்தும் ஊராட்சித்தலைவியின் கணவா் தரப்பினா் வர மறுக்கின்றனா்.

எனவே, ஊராட்சித் தலைவியின் கணவா் தரப்பினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.