கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மே 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவா் சோ்க்கைக்கு மே 25-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2022, 6:39 pm

DIN

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவா் சோ்க்கைக்கு மே 25-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2022-23-ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்ப்பதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க, ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்களின் விவரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் பள்ளி தகவல் பலகையில் மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக பெறப்பட்டிருந்தால், மே 30-ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் காத்திருப்பு பட்டியலுக்கான மாணவா்களின் விவரங்கள் போன்றவை பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.