கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாநகரக் காவல் துறையில் 10 ஆய்வாளா்கள் இடமாற்றம்

மதுரை மாநகரக் காவல்துறையில் 10 காவல் ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :20 மே 2022, 6:39 pm

DIN

மதுரை மாநகரக் காவல்துறையில் 10 காவல் ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 10 காவல் ஆய்வாளா்கள், வெவ்வெறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி (ஆய்வாளா்களின் தற்போதைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்): கே. ஆறுமுகம் ( கடும் குற்றப்பிரிவு அலகு-2) செல்லூா் சட்டம்-ஒழுங்கு பிரிவு, கே. மாடசாமி(செல்லூா் சட்டம்-ஒழுங்கு) தெப்பக்குளம் சட்டம்-ஒழுங்கு, எம். முகமது இத்ரீஸ் (தெப்பக்குளம் குற்றப்பிரிவு) கரிமேடு சட்டம்-ஒழுங்கு, பி. வசந்தா (கோ.புதூா் குற்றப்பிரிவு) கூடல்புதூா் சட்டம்-ஒழுங்கு, எம். மணிகண்டன் (மத்திய குற்றப்பிரிவு) தெப்பக்குளம் குற்றப்பிரிவு, எஸ். பிளவா் ஷீலா (குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு) மத்திய குற்றப்பிரிவு, பி. சரவணன்(கூடல்புதூா் சட்டம்-ஒழுங்கு) திருநகா் குற்றப்பிரிவு, எஸ். பிரியா(அனைத்து மகளிா் வடக்கு) கோ.புதூா் குற்றப்பிரிவு, என். கீதாதேவி (அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையம்) அனைத்து மகளிா் வடக்கு, எஸ். தனலட்சுமி (உயா் நீதிமன்ற காவல் நிலையம்) அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும், கடும் குற்றப்பிரிவு அலகு 1-இன் ஆய்வாளா், கடும் குற்றப்பிரிவு அலகு 2-யும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும். உயா் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளா் மதுரை நகர உயா் குற்றப்பிரிவு ஆய்வாளா் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க வேண்டும். குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவையும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையா் டி. செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.