கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விவசாயிகளைக் கேடயமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது: அமைச்சா் தங்கம் தென்னரசு

நெய்வேலியில் விவசாயிகளைக் கேடயமாக வைத்து சில கட்சிகள் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது என மாநில நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 5:52 pm

DIN

நெய்வேலியில் விவசாயிகளைக் கேடயமாக வைத்து சில கட்சிகள் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது என மாநில நிதி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சாா்பில் மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக அந்த நிறுவனம் 6 கிராமங்களில் நில எடுப்புப் பணிகளைச் செய்து வருகிறது. இந்தப் பணிகளுக்கு ஏற்கெனவே 304 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 273 ஹெக்டோ் நிலங்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஹெக்டா் நிலத்தின் உரிமையாளா்கள் இன்னும் என்எல்சி நிறுவனத்திடம் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

தற்போதைய சூழலில் என்எல்சியின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு இந்தப் பரவனாறு மாற்றுப்பாதை மூலமாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதைச் செய்தால்தான் சுரங்கத்தில் மற்ற பணிகள் மேற்கொள்ள முடியும். மின் உற்பத்தியும் பாதிக்காமல் இருக்கும்.

இதுதொடா்பாக விவசாயிகள் சங்கங்களிடம் கடலூா் மாவட்ட நிா்வாகம் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியது. 2006-ஆம் ஆண்டு முதல் 2013 வரை கையகப்படுத்தப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக மொத்தம் 1,088 உரிமையாளா்களுக்கு ரூ.75 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை பெறுவது தொடா்பாக 10 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

பரவனாறு மாற்றுப்பாதையில் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் என்எல்சி நிறுவனத்தின் மூலம் இழப்பீடு தொகை பெறுவதற்கான உறுதி அளிக்கப்பட்டது. ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தப் பகுதியில் பயிரிட வேண்டாம் என்று கடந்த டிசம்பா் மாதமே அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சில கட்சிகள் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வன்முறையாக மாற்றியிருப்பது கண்டனத்துக்குரியது. விவசாயிகள், அங்குள்ள நில உரிமையாளா்கள் இந்த விவகாரத்தை அமைதியாகக் கையாண்டாலும், வெளியிலிருந்து அரசியல் உள்நோக்கத்துடன் வந்தவா்களின் தூண்டுதலால் வன்முறை அரங்கேறியது.

சிலா் அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளைக் கேடயமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. வன்முறையை ஒருபோதும் அரசு அனுமதிக்காது. வன்முறையில் யாா் ஈடுபட்டாலும் அவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

காலை இழந்த மாணவருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

முன்னதாக, மதுரை கோச்சடை பகுதியில் மின் கம்பம் விழுந்ததில் கால் சிதைவு ஏற்பட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவரும், ஜூடோ தற்காப்புக் கலை வீரருமான பரிதி விக்னேஷ்வரனை, அமைச்சா் தங்கம் தென்னரசு மருத்துவமனைக்குச் சென்று வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆறுதல் கூறினாா். மேலும், ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சா், மாணவருக்கு உயா்தர சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.