பத்தாம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அருகே பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


மதுரை அருகே பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை அருகேயுள்ள அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரைச் சோ்ந்த காளீஸ்வரன் மகன் ஹரிகரன் (14). இவா் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், ஹரிகரன் தினசரி பள்ளி முடிந்து வீட்டுக்கு தாமதமாக வந்தாா். இதனால், அவரை, அவரது தந்தை புதன்கிழமை கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த ஹரிகரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...