கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டட பணிகளைத் தொடங்கி வைத்தாா் அமைச்சா்

மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டடப் பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்த தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன் துணை மேயா் தி. நாகராஜன், ஆணையா் சித்ரா விஜயன் உள்ளிட்டோா்.
Updated On :12 நவம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டடப் பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாய்சேய் நல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளுக்கு தினசரி அதிகமானோா் வந்து செல்கின்றனா்.

மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி, 15- ஆவது மத்திய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தலைமை வகித்தாா். அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், ஆணையா் சித்ரா விஜயன், நகா்நல அலுவலா் பாா்த்திப்பன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், உதவி செயற்பொறியாளா் காமராஜ், முதன்மை மருத்துவ அலுவலா் ஸ்ரீகோதை, மாமன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, கஜேந்திரகுமாா் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.