காதலித்த பெண்ணை கா்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, வகுரணி, சந்தைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரா. ராம் கணேஷ் (36). இவா், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியுள்ளாா். இதில், கா்ப்பமான அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராம் கணேஷ் மறுத்தாா்.
இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ராம் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணையின் நிறைவில், ராம் கணேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி. முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞா் தலைமறைவு
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவா் கைது
திருமணம் செய்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



