நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு

மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், வாழைத்தோப்புப் பகுதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை புதன்கிழமை திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 4:46 am IST

மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆசைத்தம்பி, வட்டாட்சியா் சுந்தரபாண்டி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் முனியாண்டி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, திமுக மாவட்டச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.