சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு
மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆசைத்தம்பி, வட்டாட்சியா் சுந்தரபாண்டி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் முனியாண்டி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, திமுக மாவட்டச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...