மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றை திறந்து வைத்தனா்.
இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆசைத்தம்பி, வட்டாட்சியா் சுந்தரபாண்டி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் முனியாண்டி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, திமுக மாவட்டச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி
எம்சிடி மேயா் தோ்தல்: 14 எம்எல்ஏக்கள் வாக்களிக்க சட்டப்பேரவை பரிந்துரை

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

