கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் 21 மடிக்கணினிகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 21 மடிக்கணினிகள் திருடப்பட்டன.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:17 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 21 மடிக்கணினிகள் திருடப்பட்டன.
   திருவாடானை அருகே மங்கலக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2015-16-ஆம் ஆண்டு படித்த 51 மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலை இல்லா மடிக்கணினிகள்  வைக்கபட்டிருந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து மாடி அறையில் இருந்த 21 மடிக்கணிகளை திருடிச்சென்று விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 அதன்பேரில் திருவாடானை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ராமநாதபுரத்தில் இருந்து மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து திருவாடானை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
   இப்பள்ளிக்கு இரவு நேரக் காவலர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.