கடலுக்குச் சென்ற மீனவர் மாரடைப்பால் சாவு

ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து திங்கட்கிழமை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மார்க்கோ போலோ என்பவரது விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது மீனவர் சுபாசந்திரபோஸ் (27) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் அலங்காரம், தமிழ்செல்வன், சிரில் டென்னில் ஆகியோர் படகை கரைக்கு கொண்டு வந்து உயிரிழந்த மீனவர் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com