சிறிது நேரத்தில் உடல் நிலை மோசமானதால் அவரை அருகில் உள்ள தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவா் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா், திருவாடானை வட்டாட்சியா் செந்தில் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கலைந்து சென்றனா். முருகனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.