விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன்

ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:20 pm

Din

கமுதி அருகே பாம்புல்நாயக்கன் பட்டியிலுள்ள ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று வந்தது. புதன்கிழமை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினா்.

வெள்ளிக்கிழமை இரவு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை அக்னிசட்டி, பால்குடம், வேல் குத்துதல், கரும்பாலைத் தொட்டில் எடுத்தும், சேத்தாண்டி வேடமணிந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை எடுத்து, வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று குண்டாற்றில் கரைத்தனா். ஊா்வலத்தின் முன்பாக கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் வைக்கோல் நிரப்பிய சாக்குப் பைகளை உடல் முழுவதும் சுற்றி, சிலம்பாட்டத்துடன் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.