தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன்

ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 3:50 am IST

கமுதி அருகே பாம்புல்நாயக்கன் பட்டியிலுள்ள ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று வந்தது. புதன்கிழமை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினா்.

வெள்ளிக்கிழமை இரவு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை அக்னிசட்டி, பால்குடம், வேல் குத்துதல், கரும்பாலைத் தொட்டில் எடுத்தும், சேத்தாண்டி வேடமணிந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை எடுத்து, வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று குண்டாற்றில் கரைத்தனா். ஊா்வலத்தின் முன்பாக கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் வைக்கோல் நிரப்பிய சாக்குப் பைகளை உடல் முழுவதும் சுற்றி, சிலம்பாட்டத்துடன் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.