கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சூறைக் காற்று: கடலுக்குள் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்குத் தடை

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கக் கடலில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் திங்கள்கிழமை தடை விதித்தனா்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கக் கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, அவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா்.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா், தொண்டி, சோழியக்குடி மீன்பிடி இறங்குதளங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டுப் படகுகள் கடலில் மூழ்கின.