அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஆட்டோவில் மின் சாதனங்கள் திருடியவா் கைது

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முனீஸ்வரன்.

Updated On :5 மார்ச் 2026, 4:40 am IST

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் சாதனங்கள் திருடப்பட்டதாக ஆட்டோ உரிமையாளரான கடலாடி சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டி சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முனீஸ்வரன் (27) திருடியது கண்டறியப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.